இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு தொடருந்துகளை மீண்டும் சேவையில் ஈடுப்படுத்த நடவடிக்கை
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு தொடருந்துகளை மீண்டும் சேவையில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தொடருந்து கட்டுப்பாட்டு திணைக்களம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு - கோட்டையிலிருந்து பதுளை நோக்கி காலை 6.45க்கு சேவையில் ஈடுப்பட்ட 1001 இலக்கமுடைய தொடருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி முதல் குறித்த நேரத்திற்கு சேவையில் ஈடுபடுத்தப்படும்.
அதேநேரம், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையில் இரவு 8 மணிக்கு 1002 என்ற இலக்கமுடைய தொடருந்தானது எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் அதேநேரத்தில் சேவையில் ஈடுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.