கொரோனா வைரஸினை அமெரிக்கா விரைவில் வீழ்த்தும் – டொனால்ட் ட்ரம்ப்

கொரோனா வைரஸினை அமெரிக்கா விரைவில் வீழ்த்தும் – டொனால்ட் ட்ரம்ப்

வெல்ல முடியாத எதிரியாக இருக்கும் கொரோனா வைரஸினை அமெரிக்கா விரைவில் வீழ்த்தும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் இருந்து பரவிய கொரோனாத் தொற்று காரணமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 20 லட்சம் பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் பல நாடுகள் அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ளன.

இந்த நிலையில் அமெரிக்க இராணுவப் படைகளின் பயிற்சி நிறைவுநாள் நிகழ்வில் பேசிய ட்ரம்ப்,  சீனாவில் இருந்துவந்த கொரோனா வைரஸை ஒழித்துக் கட்டுவோம், இந்த நோயை  விரட்டியடிப்போம் எனக் கூறினார்.