கொரோனா தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களின் விபரங்கள் வெளியாகின

கொரோனா தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களின் விபரங்கள் வெளியாகின

இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 1884ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாத்திரம் 4 தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.

கட்டாரில் இருந்து வந்த இருவர், சென்னையில் இருந்து வந்த ஒருவர் மற்றும் கடற்படையை சேர்ந்த ஒருவர் ஆகியோரே நேற்று தொற்றாளிகளாக கண்டறியப்பட்டவர்கள்.

இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களாவர். இந்தநிலையில் 621 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்

1252 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார்கள். இலங்கையில் கொரோனா தொற்றினால் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.