மக்களே அவதானம்! ஸ்ரீலங்காவில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மக்களே அவதானம்! ஸ்ரீலங்காவில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஸ்ரீலங்கா பிரஜைகளின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் செயலிகள் தொடர்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய செயலிகள் தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, ஆபத்து உள்ளதா என்ற விடயத்தை முன்வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்காவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு, பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளும் கணினி மற்றும் கையடக்க தொலைபேசி செயலிகள் தொடர்பில் உலகளவில் கடந்த நாட்களாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பல்வேறு கையடக்க தொலைபேசி செயலிகளுக்கு தடை விதித்திருந்தது.

சைபர் குற்றங்களுக்கு கையடக்க தொலைபேசி மூலம் பெற்றுக்கொள்ளப்படும் தரவுகளை பயன்படுத்த முடியும் என்பது தொழில்நுட்ப பிரிவின் நிலைப்பாடாகும்.

எனவே ஸ்ரீலங்கா பிரஜைகளின் தனிப்பட்ட தரவுகளை சேகரித்து நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கூடிய செயலிகள் தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளிடம் தகவல் தொழில்நுட்ப பிரிவு கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.