75 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக உலகத் தலைவர்கள் இல்லாமல் கூடுகிறது ஐ.நா.சபை

75 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக உலகத் தலைவர்கள் இல்லாமல் கூடுகிறது ஐ.நா.சபை

1945 ஆம் ஆண்டு 51 நாடுகள் உறுப்பினராக ஓரணியில் திரண்டு உருவாக்கிய அமைப்பே ஐக்கிய நாடுகள் சபை. இந்தியா உட்பட இன்று அதில் 193 நாடுகள் உறுப்பினராக உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றும் விவாதிக்கும் ‘உயர்மட்ட பொது அவை விவாதக் கூட்டம்’ நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, கொரோனா பேரிடர் காலத்துக்கு நடுவே, ஐ.நா.வின் 75 வது உயர்மட்ட பொது அவை விவாதக் கூட்டம், வரும் செப்டம்பர் 15 ம் திகதி தொடங்கி 22 ம் திகதி வரையில் நடைபெற இருக்கிறது.

ஆனால், கடந்த 75 ஆண்டுகால ஐ.நா.பொதுச்சபை வரலாற்றில் முதல் முறையாக, உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்காத இக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

இதை, ஐ.நா. பொது அவைக் கூட்டத்தின் தலைவர் ஜனி முகமது பாந்தி நியூயார்கில் இருந்தபடி இணையவழியில் சர்வதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது உரையாடினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,

“உலகத் தலைவர்கள் ஐ.நா. பொதுச் சபைக்கு வருவது என்றால் தனியாக வர முடியாது. எனவே இக்கூட்டத்தில் அனைத்து உலகத் தலைவர்களும் நேரில் பங்கேற்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.” என்றார்.

அதேநேரம் தள்ளிப்போடமுடியாத அவசியத்துடன் கட்டாயம் நடைபெற வேண்டிய இப்பொது விவாதக் கூட்டம், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இடங்கொடுக்காத கட்டுப்பாடுகளுடன் இணக்கமான வடிவத்தில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் பங்கேற்க முடியாது போனாலும் குறைந்தது நூறு பேரை அனுமதிக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.