மருத்துவமனைக்குள் நுழைந்து வைத்தியர்களை மிரட்டிய இருவருக்கும் பிணை

மருத்துவமனைக்குள் நுழைந்து வைத்தியர்களை மிரட்டிய இருவருக்கும் பிணை

மாதம்பே பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் நுழைந்து அங்குள்ள வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களை அச்சுறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை 20 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிப்பதற்கு சிலாபம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று சிலாபம் மாவட்ட நீதவான் மஞ்சுல ரத்னாயக முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 11ஆம் திகதி மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.