ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை..!
ஆரோக்கியமான, ஒழுக்கமான,வளமான சமுதாயத்தை உருவாக்க பிரதானமாக பங்களிக்கும் விளையாட்டுத்துறையை சிறப்பாக முன்னெடுப்பது தமது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.