வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் சம்பிரதாய நிகழ்வுகள் ஆரம்பம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் சம்பிரதாய நிகழ்வுகள் ஆரம்பம்

உப்பு நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 08 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு உப்புநீரில் விளக்கெரியும் அதிசய நிகழ்விற்கான தீர்த்தம் எடுக்கும் உற்சவம் கடந்த திங்களன்று இடம்பெற்றுள்ளது.

உற்சவத்தின் இரண்டாவது சம்பிரதாய நிகழ்வான தீர்த்தமெடுக்கும் உற்சவம் முல்லைத்தீவு தீர்த்தக்கரையிலே மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் மத்தியில் இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (08 ) அதிகாலை காட்டு விநாயகர் ஆலயத்திலிருந்து பண்டமெடுக்கப்பட்டு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை சென்றடைந்து அங்கு பொங்கல் உற்சவம் சிறப்புற இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பொங்கல் உற்சவத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.