பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளையதினம் வௌியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களையும் அழைத்து நேற்றையதினம் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் பெற்றுக்கொள்ளப்பட்ட துணைவேந்தர்களின் ஆலோசனைகள் மீளாய்வு செய்யப்பட்ட பின்னரே கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் வௌியிடப்படவுள்ளது.

இதேவேளை மருத்துவ பீடங்களின் இறுதி ஆண்டு பரீட்சைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.