கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை

இலங்கையில்  நேற்றைய தினம் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லையென சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 2 ஆயிரத்து 926 பேர் வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

அதேநேரம் தொற்றுக்கு உள்ளான 185 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் 12 பேர் இந்த வைரஸ் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் 56 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.