வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் பலத்த காற்றுடனான வானிலை தற்காலிகமாக குறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும், இன்றைய தினம் (07) மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விசேடமாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, கண்டி, நுவரெலிய மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணிக்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.