வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

காங்கேசந்துறை முதல் கொழும்பு வரை மற்றும் மன்னார் வழியாக ஆழமான மற்றும் ஆழமற்ற கடற் பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காற்று காலி தொடக்கம் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையிலான கடலோரப் பகுதிகளிலும் வீசக்கூடுமென குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டை சூழவுள்ள ஏனைய கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50 தொடக்கம் 55 கிலோமீற்றர் வேகத்தில் வீசுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்றொழிலில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.