கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக ஏற்படவுள்ள மாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக ஏற்படவுள்ள மாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் உரிய நேரகாலத்துக்கு பணிகளை நிறைவு செய்யாத நிறுவனங்களுக்கான கட்டணச் செலுத்தல்களை இடைநிறுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமான நிலைய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொடர்ந்து கால அவகாசத்தை கோரும் நிறுவனங்களுக்கு கால அவகாசத்தை வழங்க வேண்டாமெனவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளின் வளர்ச்சி தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தலைமையில் நேற்று நடைபெற்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்படவுள்ள இரண்டாவது புதிய ஓடுதளம் மற்றும் பயணிகள் போக்குவரத்து முனையத்தி அபிவிருத்திகளை முன்னெடுப்பது குறித்து இந்தச் சந்திப்பில் ஆழமாக ஆராயப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது ஓடுதளத்தை அமைக்கும் பாரிய அபிவிருத்தித்திட்டத்தை விரைவாக முடிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

இந்த அபிவிருத்தி திட்டத்திக் மூலம் புதிய பயணிகள் போக்குவரத்து முனையமொன்றும் உருவாக்கப்படுமென அமைச்சர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.