சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு

சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு

இந்தியாவின் மிகவும் முக்கியமான அணித் தலைவர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தல என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து, சக போட்டியாளராக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வந்தார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது தோனி பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். விராட் கோலி அணிக்கு தலைமையேற்ற சமயத்திலிருந்தே தோனியின் ஓய்வு குறித்துப் பல முறை ஊடகங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தோனி அறிவித்துள்ள ஓய்வும், வெறும் ஒரு நாள் போட்டிகளிலிருந்தா இல்லை இருபதுக்கு20 போட்டிகளுக்கும் சேர்த்தா என்பது குறித்துத் தெளிவில்லை.

விரைவில் இது குறித்த விரிவான அறிக்கையை தோனி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.