சிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அலைமோதிய இலட்சக்கணக்கான பக்தர்கள்
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
காலை 6.15 மணியளவில் கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்னாண்டோ தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரம சிங்க, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவணி இடம்பெற்றதோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இங்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் அன்னையின் ஆசீர்வாதத்தை வேண்டி மடுத்திருத்தலத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.