நல்லூரில் இறுக்கமான கட்டுப்பாடுகள் - மீறினால் சட்ட நடவடிக்கை

நல்லூரில் இறுக்கமான கட்டுப்பாடுகள் - மீறினால் சட்ட நடவடிக்கை

நல்லூர் ஆலய வளாகத்தில் எதிர்வரும் தினங்களில் இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் பேணப்படும் என யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.

இதுவேளை, நல்லூர் கந்தன் ஆலய திருவிழா நடவடிக்கைகளை சுகாதார வழிமுறைகளுடன், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானபக்தர்களுடன் முன்னெடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகம் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

தொற்றுநோய் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பக்தர்கள் ஆலய சூழலில் கூடும் சந்தர்ப்பத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் அனைவரும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார வழிகாட்டல்களை மீறி, சமூக இடைவெளியைப் பொருட்படுத்தாமல் செயற்படுபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல், நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.