ஷங்காய்க்கான ஶ்ரீலங்கன் விமான சேவையை இடைநிறுத்த சீனா நடவடிக்கை!

ஷங்காய்க்கான ஶ்ரீலங்கன் விமான சேவையை இடைநிறுத்த சீனா நடவடிக்கை!

ஶ்ரீலங்கன் விமான சேவை உள்ளிட்ட மூன்று விமான சேவைகளின் ஷங்காய்க்கான விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் சிவில் விமான சேவை ஒழுங்குபடுத்தல் நிறுவனம் இதற்குரிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

குறித்த விமான சேவைகளூடாக சீனாவிற்கு அழைத்துச்செல்லப்பட்ட பயணிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் விமான சேவையின் UL 866 விமானத்தில் கடந்த 7 ஆம் திகதி பயணித்த 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சீனாவின் சிவில் விமான சேவை கட்டுப்பாட்டுச் சபையை மேற்கோள் காட்டி Xinhua செய்திச் சேவை செய்தி வௌியிட்டுள்ளது.

Etihad விமான சேவையின் EY 862 விமானத்தில் ஆகஸ்ட் மூன்றாம் திகதி பயணித்த மூன்று பேருக்கும், சைனா ஈஸ்டன் விமான சேவையில் ஆகஸ்ட் ஐந்தாம் திகதி பயணித்த பயணிகளில் ஆறு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், ஶ்ரீலங்கன் விமான சேவையின் கொழும்பு மற்றும் ஷங்காய்க்கு இடையிலான விமானப் போக்குவரத்து ஒரு மாதத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளதாக Xinhua செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஏனைய இரண்டு விமான சேவைகளின் விமானப் போக்குவரத்து ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது.