மன்னாரில் கைதாகிய வெளிநாட்டுப் பிரஜை - நாட்டுக்கு செல்ல அனுமதி!

மன்னாரில் கைதாகிய வெளிநாட்டுப் பிரஜை - நாட்டுக்கு செல்ல அனுமதி!

தலைமன்னாரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர் கொரோனா அச்சத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக சொந்த நாட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நாட்களில் ரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று தொடர்பான பிசீஆர் பரிசோதனை இடம்பெற்று இன்றைய தினம் குறித்த அறிக்கையானது மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் சமர்பிக்கப்பட்டது.

அறிக்கையின் பிரகாரம் குறித்த பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரஷ்ய பிரஜை சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி டினேசனினால் மிரிகானா ஊடாக குறித்த நபரை ரஷ்யாவிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த கோரிக்கையை ஏற்று குறித்த நபரை சொந்த நாட்டுக்கு மிரிகானா ஊடாக அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதி மன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.