கொரோனா வைரஸ் : ஒரேநாளில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஒரேநாளில் 67 ஆயிரித்து 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 950 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 23 இலட்சத்து 95 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 138 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 16 இலட்சத்து 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 6 இலட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவர்களில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.