விநாயகர் சதுர்த்தியன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் நித்தியானந்தா

விநாயகர் சதுர்த்தியன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் நித்தியானந்தா

எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கைலாசா குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

ரிசர்வ் பாங்க் ஒப் கைலாசா, கைலாசா நாட்டின் பணம் குறித்த அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வத்திக்கான் வங்கியை மையமாக கொண்டு ரிசர்வ் பாங்க் ஒப் கைலாசா உருவாகி உள்ளது. உள்நாட்டுக்கு புழக்கத்துக்கு ஒரு பணமும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு பணமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 300 பக்க பொருளாதார கொள்கை தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.