பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்

நீதித்துறையினரிடமிருந்து அனுமதி கிடைக்காததன் காரணமாகவே முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதன்போது போது பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

எனினும் அவர் கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிள்ளையான் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அனுமதியை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம் ஆனால் அது வெற்றியளிக்கவில்லை என கூறப்படுகிறது.