யாழில் ஆலயத்தை உடைத்து திருடர்கள் கைவரிசை!

யாழில் ஆலயத்தை உடைத்து திருடர்கள் கைவரிசை!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி வரணி வடக்கில் அமைந்துள்ள கும்பிட்டான்புல பிள்ளையார் ஆலயத்தை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆலய கதவை உடைத்து அங்கிருந்த நகை, பணம் மற்றும் ஐம்பொன்னாலான கலசம் உட்பட பல பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

ஆலயத்தில் பொருத்தப்பட்ட சிசிடீவி கமராவில் சந்தேக நபர் கொள்ளையிடும் காட்சி பதிவாகியுள்ள போதிலும் குறித்த நபரை அடையாளம் காணமுடியவில்லை.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.