ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் – இன்றும் கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் – இன்றும் கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நேற்றும் ஆராயப்பட்டபோதிலும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லலை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள கலந்துரையாடலைத் தொடர்ந்து, இறுதி முடிவு தொடர்பாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியில் உறுப்பினர் பதவிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அந்த கட்சியின் தலைவர் மனோ கணேசன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரகிறார்.

அதேபோல், தமது கட்சியின் உறுப்பினர்களுக்கும் தேசிய பட்டியலில் இடம் கிடைக்க வேண்டும் என ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரும் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.