அமெரிக்க கறுப்பினத்தவரின் மரணம் “கொலை”-வெளிவந்தது பிரேத பரிசோதனை அறிக்கை
அமெரிக்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த கறுப்பின அமெரிக்கரின் உயிரிழப்பு கொலை என என உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்ஜ் புளோயிட் என்ற கறுப்பினத்தவர் இருத நோயின் காரணமாகவே உயிரிழந்ததாக கடந்த 25 ஆம் திகதி அமெரிக்க பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் உயிரிழந்த ஜோர்ஜ் புளோயிட்டின் பிரேத பரிசோதனையில், கழுத்து மற்றும் இதய பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் உயிரிழந்தமை உறுதியாகியுள்ளது.
ஜோர்ஜ் புளோயிட்டிற்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் இருந்ததால், காவலர்களின் கொடூரமான நடவடிக்கையால் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.