கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ – உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ – உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ விபத்து – 7 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொகுசு ஹோட்டலொன்று கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

5 மாடி கொண்ட அந்த சொகுசு ஹோட்டலில் தற்போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஹோட்டலில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சொகுசு ஹோட்டலில் 3ஆவது மாடியில் கொரோனா தொற்று சிகிச்சையிலிருந்த 10 நோயாளிகள் மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தீ விபத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்ற அச்சத்தில் அவர்களை மீட்கும் பணியில் பொலிஸார், மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சொகுசு ஹோட்டலில் ஒரு பகுதியில் பற்றிய தீ, ஏனைய இடங்களுக்கும் பரவியதால் அப்பகுதி முழுவதும் கடுமையான புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.

மேலும் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள்அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.