வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிப்பு

வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிப்பு

வடக்கிற்கான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

காட்டு யானை ஒன்று ரயிலுடன் மோதுண்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

காங்கேசந்துறையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.45 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த ஸ்ரீதேவி ரயிலுடன் மாங்குளம் மற்றும் புளியங்குளம் இடையே குறித்த யானை மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் தண்டவாளம் தடம்புரண்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ரயிலில் மோதுண்ட காட்டு யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.