ராஜிதவுக்காக பேருவளையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு தடை- நீதிமன்றம் உத்தரவு

ராஜிதவுக்காக பேருவளையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு தடை- நீதிமன்றம் உத்தரவு

பேருவளை கூட்டுறவு சங்கத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு களுத்துறை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித் சேனாரத்னவை விடுதலை செய்யக்கோரி ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான இயக்கத்தினால் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படவிருந்தது. கொவிட் 19 பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் அணிவகுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பேருவளை காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த உத்தரவு பத்திரத்தை ஆர்ப்பாட்டக்காரர்களிடம் வழங்கப்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து போனதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.