சசிகலாவுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நானும் போராடுவேன் - பவதாரணி இராஜசிங்கம்

சசிகலாவுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நானும் போராடுவேன் - பவதாரணி இராஜசிங்கம்

மக்களால் தெரிவு செய்யப்பட்டவரை விலகச் சொல்லி அந்த இடத்துக்கு மக்களால் நிராகரிக்கப்பட்டவரை மாற்ற முனைவது அபத்தமானது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் பவதாரணி இராஜசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

பாராளுமன்ற தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் மக்களின் அன்பை பெற்ற நம்பிக்கையை பெற்றவர்களே பாராளுமன்றம் செல்லவேண்டும்.

இதனடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்படுகின்றது. ஆனால் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவரை விலகச் சொல்லி அந்த இடத்திற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை மாற்றமுனைவது அபத்தமானது.

இது பெரும் சவாலான விடயம். ஒரு பெண்ணை முன்னிறுத்தி வாக்குகளை சுவீகரித்து அவளை புறந்தள்ளி அவளது இடத்தில் வேறொருவர் வரநினைப்பது சமூகமட்டத்தில் நடக்கும் அநீதியே.

இந்த தவறு நிகழ அனுமதித்தால் எங்கேனும் ஒரு இடத்தில் இதன் தொடர் நிகழ்ந்து கொண்டே இருக்க அனுமதித்தவர்களாகி விடுவோம்.

கட்சி பேதங்களை கடந்து பெண்ணாக நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டவர்கள். அவளுக்கு ஒரு அநீதி எழும்போது அதற்கு எதிராய் குரல் கொடுப்பேன் என உறுதியாய் முடிவெடுத்துள்ளோம்.

ட்சிகளை கடந்து பெண் வேட்பாளர்கள் இணைந்து பயணிக்கவேண்டும் என மற்றவர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.