ஐ.தே.க.வின் தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் சஜித் தலைமையிலான அலுவலகத்தில்..!

ஐ.தே.க.வின் தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் சஜித் தலைமையிலான அலுவலகத்தில்..!

ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். இதன்பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, குறித்த குழுவை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் யார் என்பது இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் என கூறிய சஜித் பிரேமதாச, பெரும்பான்மையுடன் ஒரு சுத்தமான கட்சியை உருவாக்குவதாகவும் மேலும் தொழிலாளர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக செயல்படுவேன் என்றும் கூறியுள்ளார்.