மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ருவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி

மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ருவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி

2020 பொதுத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளிவந்துள்ள நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவிற்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ருவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் என்னால் முன்வைக்கப்பட்ட ‘சுபீட்சத்தின் நோக்கு ‘ கொள்கையை மீண்டும் ஒருமுறை மக்கள் சக்தியின் மூலம் உறுதிப்படுத்த இந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.