மாதவன் இயக்கத்தில் நடித்த சூர்யா, ஷாருக்கான்

மாதவன் இயக்கத்தில் நடித்த சூர்யா, ஷாருக்கான்

மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ராக்கெட்ரி: நம்பி விளைவு. ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கை ‘ராக்கெட்ரி’ என்ற தலைப்பில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகி உள்ளது. இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்க, அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.

இந்த படத்தில் சூர்யா பத்திரிக்கையாளராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் வருவதுபோல் இருந்தாலும் அவரது கதாபாத்திரம் கதைக்கு திருப்புமுனையாக இருக்கும் என்கிறார்கள். இந்த படத்தின் இந்தி பதிப்பில் சூர்யா கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். சூர்யா, ஷாருக்கான் நடித்துள்ளதால் இப்படத்தின் வர்த்தகம் மேலும் சூடுபிடிக்கும் என சொல்லப்படுகிறது.