கொழும்பில் இறுக்கமாக அமுலாக்கப்படவுள்ள புதிய சட்டம்

கொழும்பில் இறுக்கமாக அமுலாக்கப்படவுள்ள புதிய சட்டம்

கொழும்பு மாநகரில் பேருந்து முன்னுரிமை ஒழுங்கை சட்டம் அமுலாகவுள்ளதென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் இன்று தொடக்கம் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சாரதிகளுக்கு விதிமுறைகள் பற்றி விளக்கமளிப்பார்கள். அதன் பின்னர் குறித்த சட்டம் இறுக்கமான முறையில் அமுலாக்கப்படும்.

காலை 06 மணி தொடக்கம் 09 மணி வரை கொழும்பிற்கு வருகை தரும் பேருந்துகளும், மாலை 04 மணி தொடக்கம் இரவு 07 மணி வரை கொழும்பிலிருந்து வெளியேறும் பேருந்துகளும் இந்த விதி முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

இதேவேளை ஓல்கொட் மாவத்தை, ரீகல், குமாரன் ரட்னம் வீதி, பித்தளைச் சந்தி, நூலக சுற்றுவட்டம் ஊடாக கொள்ளுப்பிட்டி வரையிலான மார்க்கத்தில் பேருந்து முன்னுரிமை ஒழுங்கை சட்டம் அமுலாகவுள்ளது.

கொழும்பிலிருந்து வெளியேறும் பேருந்துகள் மாலை 05 மணி தொடக்கம் இரவு 08 மணி வரை கல்கிஸ்ஸ மெலிபன் சந்தியில் இருந்து மொரட்டுவ சிலுவை சந்தி வரையில் இந்த சட்டத்தை கடைப்பிடிப்பது கட்டாயமானது.

புதிதாக தொடங்குவோம் - சாலை ஒழுக்கத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த வேலைத்திட்டம் அமுலாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.