கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை: மஹிந்த சஜித் பங்கேற்பு

கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை: மஹிந்த சஜித் பங்கேற்பு

அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பேரவையின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 4 மணியளவில் அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது.

இக்கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றில் காணப்படும் வெற்றிடங்கள் குறித்து ஆராயப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.