இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,736 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 54, 736 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17 இலட்சத்து 50 ஆயிரத்து 724ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 853 பேர் உயிரிழந்தமையினால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 364ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இந்தியாவில் 5இலட்சத்து 67 ஆயிரத்து 730 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 இலட்சத்து 45 ஆயிரத்து 630 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனைர்.
இதேவேளை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டரை இலட்சத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.