வனம் வளர்ப்போம்! : வேலையின்மையை எதிர்த்து வெல்லும் பாகிஸ்தான்

வனம் வளர்ப்போம்! : வேலையின்மையை எதிர்த்து வெல்லும் பாகிஸ்தான்

2020 ஆம் ஆண்டின் உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டின்படி, கடந்த இருபது ஆண்டுகளில் உலக வெப்பநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 1999-2018 முதல், 150 க்கும் மேற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளாக (வெப்ப அலைகள், வறட்சி, வெள்ளம் போன்றவை அந்நாட்டில் பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது, அவை உலகளாவிய காலநிலை மாற்றம் மோசமடைவதால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்தே அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான், 2018ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தினால் பெருகிவரும் விளைவுகளை எதிர்கொள்ள ஒரு திட்டத்தினை கொண்டுவந்தார். அது நாட்டிற்கு நன்மை பயக்கும் 10 பில்லியன் சுனாமி மரநடுகை முயற்சியே ஆகும். இத் திட்டமானது ஐந்து ஆண்டு காலப்பகுதியில் பாலைவன நிலப்பரப்பில் பெயரிடப்பட்ட பத்து பில்லியன் மரங்களை நடவு செய்ய முயல்கிறது.