பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்து தீர்மானிக்க விசேட கலந்துரையாடல்

பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்து தீர்மானிக்க விசேட கலந்துரையாடல்

க.பொ.த உயர்தர பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் திகதியானது பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்து தீர்மானிக்க எதிர்வரும் புதன் கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

பாடசாலைகளை மீள திறப்பது குறித்தும் பரீட்சைகளை நடத்துவது தொடர்பிலும் இதுவரை சுகாதார அமைச்சு எந்தவித அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லையென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய சுற்றுநிரூபம் மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிரூபம் சகல பாடசாலைகளுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.