எப்போது உயர்தரப் பரீட்சை? பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித வெளியிடும் தகவல்

எப்போது உயர்தரப் பரீட்சை? பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித வெளியிடும் தகவல்

இந்த ஆண்டுக்கான உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். எனினும், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை கவனத்தில்கொண்டு உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்படும் என்று இன்று தெரிவித்தார்.

எந்த மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் உயர் தர பரீட்சையை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

இது தொடர்பான கலந்துரையாடல் தொடர்ந்தும் நடைபெற்றுவருவதாகவும், மாணவர்களின் நலன் கருதி சரியான முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.