மின்னுற்பத்திக்கு அவசியமான எரிபொருளை இந்தியாவிடமிருந்து நேரடியாகப் பெற அவதானம்

மின்னுற்பத்திக்கு அவசியமான எரிபொருளை இந்தியாவிடமிருந்து நேரடியாகப் பெற அவதானம்

இலங்கையின் மின்னுற்பத்திக்கு அவசியமான எரிபொருளை இந்திய கடனுதவியின் கீழ், நேரடியாகப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தினால், அண்மையில் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கப்பட்டது.

அதனை இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையின் மின்னுற்பத்தி நிலையங்களை செயற்படுத்துவதற்காக, மாதமொன்றுக்கு அவசியமான 30 மில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருளை, பிரத்தியேக கட்டளையின் மூலம் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.