யாழில் 517 கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழில் 517 கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் - கோவிலம் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 517 கிலோ கிராமுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்பகுதியில் மிதந்த 10 மூடைகளில் இருந்து 355 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

பின்னர் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றினை சோதனைக்கு உட்படுத்த முற்பட்ட சந்தர்ப்பத்தில் அதில் இருந்த மேலும் சில மூடைகளை கடலில் வீசுவதற்கு முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 162 கிலோ கிராம் கேரளா கஞ்சா போதைப் பொருள் தொகை மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்சா போதைப் பொருள் 155 மில்லியன் ரூபா பெறுமதியுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.