அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமிகள் சடலங்களாக மீட்பு!

அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமிகள் சடலங்களாக மீட்பு!

பேருவளை – மக்கொன பகுதியில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமிகள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை மக்கொன கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் இரு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நேற்றைய தினம் தமது நண்பர்களுடன் மக்கொன உஸ்வெல்ல கடற்கரையில் விளையாட சென்றபோது, சிறுமிகள் உட்பட நான்கு பேர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடல் அலையில் சிக்குண்ட ஏனைய இருவரை பிரதேச மக்கள் காப்பாற்றியுள்ளனர். இதனையடுத்து காணாமல்போன சிறுமிகளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வந்த நிலையில், அவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பேருவளை கோப்பியாவத்தை பகுதியைச் சேர்ந்த பாத்திமா நிஸ்பா (15வயது) , பாத்திமா நிஸ்மா (12வயது) ஆகிய சகோதரிகளின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மற்றைய சகோதரியான பாத்திமா நிப்லா (8 வயது) பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டிருந்தார்

இவர்கள் மூவரும் பேருவளை மாளிஹாஹேன ரிபாய் ஹாஜியார் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.