பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றிற்கான திகதிகள் இன்று அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு பரீட்சை திகதிக்கான தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்ச நிலையில் பரீட்சைகள் தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

பாடசாலைகளை மீள திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் உயர் தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளும் தாமதமாகும்.

உயர் தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையை ஒரே சந்தர்ப்பத்தில் நடத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் ஆரம்பமாவதில் தாமதமானால் புலமைப்பரிசில் பரீட்சையை தனியாக நடத்தவேண்டி ஏற்படும்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை கொரோனா ஒழிப்பு செயலணியுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளது.

பாடசாலைகள் மீள திறக்கப்படாவிடில் வீடுகளில் இருந்து மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு புதிய ஆலோசனை அறிக்கை ஒன்றை விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகஅவர் தெரிவித்துள்ளார்.