வியக்க வைத்த ஆராச்சியாளர்கள்....கோடிக்கணக்கான மனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகள் வாழ தேவையான ஆக்ஸிஜன் நிலவில் உள்ளதாம்!

வியக்க வைத்த ஆராச்சியாளர்கள்....கோடிக்கணக்கான மனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகள் வாழ தேவையான ஆக்ஸிஜன் நிலவில் உள்ளதாம்!

நிலவில் ஆக்ஸிஜன் இருப்பது குறித்த தகவலை ஆராச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த தகவல் நம்பமுடியாத ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. நிலவில் மேற்பரப்பில் 800 கோடி மனிதர்கள் 1 லட்சம் ஆண்டுகள் வாழ தேவையான ஆக்ஸிஜன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் ஆக்ஸிஜன் நிலவின் ‘ரெகோலித்’-தில் (நிலவின் மேற்பரப்பில் உள்ளடங்கியுள்ள பாறை மற்றும் தூசு அடுக்குகள்) இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆக்ஸிஜன் வாயு வடிவில் நிலவில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக கடந்த அக்டோபரில் ஆஸ்திரேலிய விண்வெளி முகமையும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து ரோவார் ஒன்றை நிலவுக்கு அனுப்பி உள்ளன.

அதன் மூலம் அங்கு இருக்கும் பாறைகளை சேகரித்துக் கொண்டு வந்து, அதை மனிதன் சுவாசிக்க கூடிய ஆக்ஸிஜனாக மாற்றுவது எப்படி என்ற ஆய்வு நடக்க உள்ளது.