பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற மொத்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2,500ஐ கடந்தது!

பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற மொத்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2,500ஐ கடந்தது!

நடப்பு ஆண்டு ஆங்கில கால்வாய் ஊடாக, பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற மொத்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2,500ஐ கடந்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 2,660பேர் சிறிய படகுகளில் பிரான்ஸிலிருந்து Kent மற்றும் Sussex கடற்கரைக்குச் சென்றுள்ளதாக, ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படப்படடுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15 படகுகளில் 180 புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு சென்றதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் பிரித்தானியாவுக்கு சென்ற முந்தைய அதிகபட்ச எண்ணிக்கை ஜூன் 3ஆம் திகதி 166ஆக பதிவாகியிருந்தது.

மேலும், 200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பிரான்ஸ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.