பிக் பாஸ்-இல் இருந்து வெளியேறிய திருநங்கை நமீதா மாரிமுத்து - ரசிகர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ்-இல் இருந்து வெளியேறிய திருநங்கை நமீதா மாரிமுத்து - ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக வீட்டிற்குள் அனுப்பப்பட்ட திருநங்கை நமிதா, திடீரென இந்த நிகழ்ச்சியில் இருந்து அவராகவே வெளியேறினார் என தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பபட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே மிகவும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு பெரிய பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த நிகழ்ச்சிக்கு சாமானிய மக்கள் மட்டுமல்லாமல், பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கின்றனர்.

 

 

இந்நிலையில் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிட்ட நாட்கள் தனிமைக்கு பின்னரே வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் ஒரு திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுப்பப்பட்டார்.

அவர் நேற்று நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் தனது கதையை சொல்லி அழுதது அனைவரையும் கண் கலங்க வைத்தது. மேலும் அனைத்து திருநங்கைகள் சார்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல் வருவார்.

தற்போது பிக்பாஸ் குறித்து வெளிவந்த தகவல் என்னவென்றால், இந்நிகழ்ச்சியில் இருந்து சில தவிர்க்க முடியாத காரணத்தால் நமீதா மாரிமுத்து வெளியேறுவதாக கூறப்பட்டு உள்ளது.

முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்காது என்பதால் அவர் உண்மையாகவே வெளியேற்றப்பட்டுள்ளாரா என ரசிகர்களிடம் குழப்பம் எழுந்துள்ளது. இந்த செய்தி வெளியான நிலையில் இன்றைய எபிசோட் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.