திருமணம் முடித்து வெளிநாடு செல்ல இருந்த பெண் மரணம்

திருமணம் முடித்து வெளிநாடு செல்ல இருந்த பெண் மரணம்

யாழ்ப்பாணம் வடமராட்சியில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து இருந்த குடும்ப பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வடமராட்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வடமராட்சி, நவிண்டிலை சேர்ந்த தவேந்திரன் துளசிகா (வயது 37) எனும் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த பெண் சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று குணமாகி இருந்தார் எனவும், அந்நிலையில் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக தற்போது உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த பெண் வெளிநாட்டில் உள்ள ஒருவரை திருமணம் முடித்திருந்ததாகவும், மிக விரைவில் வெளிநாட்டில் உள்ள தனது கணவனிடம் செல்ல இருந்தார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.