1,100 கிலோ மஞ்சள் கட்டிகள் மீட்பு

1,100 கிலோ மஞ்சள் கட்டிகள் மீட்பு

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் 1,100 கிலோ மஞ்சள் கட்டிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், மீனவர்களும் கைது செய்துள்ளனர்.

இன்று காலை குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் மஞ்சள் பொதிகளையும் சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
 

-யாழ். நிருபர் சுமித்தி-