24 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் திணறல்

24 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் திணறல்

டு பிளிஸ்சிஸ், மொயீன் அலி டக்அவுட்டில் வெளியேற சுரேஷ் ரெய்னா 4 ரன்னில் ஆட்டமிழக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 24 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

 

எம்.எஸ். டோனி அவுட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்தியா- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று இரவு இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு  தொடங்கியது. சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

 

ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளிஸ்சிஸ் முதல் ஓவரின் கடைசி பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயீன் அலியும் டக்அவுட்டில் வெளியேறினார்.

 

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்

 

 

3-வது விக்கெடடுக்கு களம் இறங்கிய அம்பத்தி ராயுடன் 3 பந்துகளை சந்தித்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 4 ரன்கள் எடுத்த திருப்தியுடன் வெளியேறினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்துள்ளது.

 

அடுத்து எம்.எஸ். டோனி களம் இறங்கினார். தல டோனி சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 ஓவரில் 24 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.