கருப்பினத்தவருக்காக உருகும் பராக் ஒபாமா: சொல்லும் முக்கிய செய்தி என்ன தெரியுமா?

கருப்பினத்தவருக்காக உருகும் பராக் ஒபாமா: சொல்லும் முக்கிய செய்தி என்ன தெரியுமா?

அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்திற்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

உங்களுக்கு சேவை செய்து பாதுகாக்க வேண்டியவர்களாலேயே பெரும்பாலும் வன்முறைகள் வந்துகொண்டிருகின்றன. நீங்கள் மிக முக்கியமானவர்கள், உங்கள் வாழ்க்கை முக்கியமானது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். உங்கள் கனவுகள் முக்கியம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

ஆப்பிரிக்க - அமெரிக்க மக்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள் தான் அதிகமாக கலந்துகொண்டுள்ளனர். அவர்களின் செயற்பாடு பெரிய மாற்றத்துக்கு உத்வேகமாக அமையும்.

அமெரிக்கா தன் அதிகாரத்தை பயன்படுத்துவது தொடர்பான கொள்கைகளில் சில திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். கடந்த வாரம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வரலாற்று நிகழ்வுகள் நம் நாட்டில் நடந்தன. பலரது மனங்களில் மாற்றம் வந்துள்ளது.

அமெரிக்கா ஒரு சமூகமாக ஒரே நாடாக உருவாக இதைப் பயன்படுத்துவோம். இந்தச் சூழல் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதேவேளை நாட்டில் உள்ள அனைத்து மேயர்களும் அதிகாரங்கள் தொடர்பான கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற உலகில் நடந்த முக்கிய விடயங்களின் தொகுப்பாக வருகிறது இன்றைய மதியநேர செய்திகள்,