பிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையாக விடுதலையான நாள்- 19-8-1919

பிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையாக விடுதலையான நாள்- 19-8-1919

ஆப்கானிஸ்தான் அல்லது ஆப்கனிசுத்தான் என்னும் நாட்டின் முழுப்பெயர் ஆப்கானிஸ்தான் இசுலாமியக் குடியரசு ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட நடு ஆசிய நாடாகும். மேற்கே ஈரானை எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கிலும் கிழக்கிலும் பாகிஸ்தானை எல்லையாக உடையது. வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் என்ற நாடுகள் எல்லையாக அமைந்துள்ளன. கிழக்கில் சீனாவை எல்லையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுடனான இதன்

ஆப்கானிஸ்தான் அல்லது ஆப்கனிசுத்தான் என்னும் நாட்டின் முழுப்பெயர் ஆப்கானிஸ்தான் இசுலாமியக் குடியரசு ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட நடு ஆசிய நாடாகும். மேற்கே ஈரானை எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கிலும் கிழக்கிலும் பாகிஸ்தானை எல்லையாக உடையது. வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் என்ற நாடுகள் எல்லையாக அமைந்துள்ளன. கிழக்கில் சீனாவை எல்லையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காஷ்மீரூடாகச் செல்கிறது.

கி.பி. முதலாம் நூற்றாண்டில தொசேரியன், குசானர்கள் போன்றோர் இந்நிலப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். அரேபியர் இப்பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் வரை பாரசீகர், சித்தியர் மற்றும் மங்கோலியரான கூன் இனத்தவர் போன்ற யூராசியக் கோத்திரத்தவர்களும், சாசானியர்கள் போன்ற பாரசீகரும் உள்ளுர் ஆட்சியாளரான இந்து சாகிகள் போன்றோரும் இந்நிலப்பகுட்தியை ஆட்சி செய்தனர்.

ஏழாம் நூற்றாண்டில் அரபு இராச்சியங்கள், ஆப்கானிஸ்தானின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கின. அரபுப் பேரரசுகள் தமது அரசை மேற்கு ஆப்கானிஸ்தானுக்கு 652-ல் விரிவாக்கியதுடன் மெல்ல மெல்ல முழுப் பகுதியையும் 706-709 வரையான காலப்பகுதியில் ஆக்கிரமித்துக் கொண்டன. பின்னர் இப்பகுதியை குராசான் என அழைத்ததுடன் அப்பகுதியிலிருந்த பெரும்பாலான மக்கள் முஸ்லிம்களாக மாறினர்.

19-ம் நூற்றாண்டுப் பகுதியில் ஆங்கிலேய– ஆப்கானிய யுத்ததின் பின்னரும் பராக்சாய் சாம்ராச்சியத்தின் வளர்ச்சியின் பின்னரும் ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி ஐக்கிய இராச்சியத்திடம் போயிருந்தது. 1919-ல் அரசர் அமனுல்லா கான் அரியணை ஏறும் வரை ஐக்கிய இராச்சியம் ஆப்கானிஸ்தானில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. இவருக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு விவகாரங்களில் பிரிட்டகிடம் இருந்து பூரண சுகந்திரம் பெற்றுக்கொண்டது.