உலகிலேயே விலை உயர்ந்த பர்கர் இதுவாம்!.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

உலகிலேயே விலை உயர்ந்த பர்கர் இதுவாம்!.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

உலகத்திலேயே மிக விலையுயர்ந்த பர்கரை நெதர்லாந்தை சேர்ந்த சமையல் நிபுணர் ஒருவர் உருவாக்கியுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.

உலகில் மக்கள் அதிகளவில் உண்ணப்படும் பல்வேறு துரித வகை உணவுகளில் முக்கியமானதாக இருப்பது பீட்சா, பர்கர் போன்றவை. பல வகைகளில் உருவாக்கப்படும் இந்த பர்கர் தற்போது உலகின் விலை உயர்ந்த பர்கர் என்ற பெருமையை நெதர்லாந்தை சேர்ந்த சமையல் நிபுணர் மூலம் பெற்றுள்ளது.

டி டால்டன்ஸ் என்று பெயரிடப்பட்ட உணவகத்தின் உரிமையாளரான ராபர்ட் ஜான் டி வீன் என்பவர் ஒரு விலையுயர்ந்த ஹாம்பர்கரை உருவாக்கியுள்ளார்.

இதன் ஒரு துண்டுக்கு சுமார் 5,000 டாலர்கள் (அதாவது இந்திய மதிப்பில் ரூ. 4,41,305) செலவகுமாம். மேலும், ராபர்ட் ஜான் தயாரிக்கும் இந்த பர்கரில் வழக்கமான பொருட்களுடன், உலகின் விலை உயர்ந்த காஃபி கொட்டையான கோபி லுவாக்கால் செய்யப்பட்ட பார்பெக்கு சாஸ், டாம் பெரிகோன் சாம்பெயினில் தயாரிக்கப்பட்ட பன் போன்றவை பயன்படுத்தப்படுவதோடு தங்க இழை சுருளால் சுற்றப்பட்டு அளிக்கப்படுகிறதாம்.

இதன்காரணமாகவே இந்த பர்கர் உலகத்திலேயே மிக விலையுயர்ந்த பர்கராக கூறப்படுகிறது.